Saturday, February 12, 2011

பெண் படைப்பாளிகளுக்கு ஒரு வாய்ப்பு



பெண்கள் படைப்புகளின் தொகுப்பு



"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”
- பாரதியார்


நீங்கள்,

ஓவியரா...
சிறுகதை எழுத்தாளரா…
கட்டுரையாளரா… ஆய்வுத்திறன் மிக்கவரா...
உங்களுக்கு கவிதை எழுதும் ஆற்றல் உண்டா…
நீங்கள் வளரும் கலை, இலக்கியரா…
அன்றி முதுபெரும் படைப்பாளிகளா… மொழிபெயர்ப்பாளர்களா…?

2010 யூலை 18ம் நாள் இயற்கையெய்திய எங்கள் அன்னையார் அமரர் திருமதி யோகா யோகாம்பிகை அவர்களின் ஆத்மார்த்த வேண்டுகோளின் நினைவாக, ஆண்டுதோறும் நூல் வெளியீடுகளை மேற்கொள்வதென்று தீர்மானித்திருந்தோம். அவ்வகையில் 2011 செப்ரம்பர் 10ம் நாள் வெளிவர இருக்கும் „பெண்கள் படைப்புக்களின் தொகுப்பு“ ஒற்றிற்கான ஆக்கங்களை இலங்கை, இந்தியா, மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் எதிர்பார்க்கின்றோம்.

சிறந்ததென நீங்கள் தீர்மானிக்கும் (ஆகக்கூடியது) இரண்டு ஆக்கங்களை 2011 ஏப்பிரல் 15ந் திகதிக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்.

ஆக்கங்களை அனுப்பிவைப்பதற்கான முகவரிகள்:

E- mail:

தபால் முகவரி:
Mehala Hasini
C/O A.G.Yoharaja
Rumiweg 40
4900 Langenthal
Switzerland.

நன்றியுடன்
ஏ.ஜி. யோகராஜா, மேகலா, காசினி, கிருஷா, கு.கபில் சங்கர்

No comments:

Post a Comment